tamilnadu

img

புத்தாண்டு-பொங்கல் கொண்டாட்டம் தவிர்க்க திருமா. வேண்டுகோள்

சென்னை,டிச.31- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவள வன் எம்பி, வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- குடியுரிமைத் திருத்தச் சட்டம்(சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை எதிர்த்துக் கட்சிசார்பற்ற வெகுமக்களும் லட்சக்கணக்கில் பங்கேற்கும்  அறப்போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாடே கொந்தளித்துள்ள இச்சூழலில், ஆங்கிலப்புத்தாண்டு மற்றும்  பொங்கல் கொண்டாட்டங்கள் பரந்துபட்ட மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிடக்கூடாது; பாஜக பாசிச அரசுக்கு எதிரான  தற்போதைய போர்க்கனல் தணிந்துவிடக்கூடாது என்கிற கவலை மேலோங்குகிறது. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் நமது  நாட்டைச் சூழ்ந்திருக்கும் பேராபத்தை உணர்ந்து, விடுதலைச்சிறுத்தை களும் இதர ஜனநாயக சக்திகளும் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்ப்பது நலமென கேட்டுக்கொள்கிறேன். குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய  மக்கள் தொகை பதிவேடு ஆகியவை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் எதி ரானது அல்ல; அது ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. மதச்சார்பின்மை  கோட்பாட்டை வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இச்சட்டங்களின் மூலம் மதவாதத்தையும் வெறுப்பையும் மக்களிடம் பரப்பி மக்களைக் கூறுபோடும் சதிமுயற்சியை முறியடித்து, மதச்சார்பின்மை யையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது ஜன நாயகச் சக்திகளின் கடமையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் திருமா. தெரிவித்திருக்கிறார்.

;